பிளான் பி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் லண்டனில் இது கட்டாயம்! மேயர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
லண்டன் TFL சேவைகளில் முகக்கவசம் கட்டாயமாக இருக்கும் என்று லண்டன் மேயர் அறிவித்துள்ளார்.
பிரித்தானயாவில் ஓமிக்ரானை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட பிளான் பி நடவடிக்கைகள், ஜனவரி 26ம் திகதியோடு முடிவுக்கு வரும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
பிளான் பி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, லண்டன் போக்குவரத்து(TFL) சேவைகளில் முகக்கவசம் கட்டாயமாக இருக்கும் என்று நகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
தலைநகர் லண்டனில் பயணம் செய்யும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை மேயர் சாதிக் கான் நினைவூட்டியுள்ளார்.
பிளான் பி நீக்கப்படும்போது தவறவிடக்கூடாத ஒரு மிக முக்கியமான குறிப்பு இது: விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் TfL சேவைகளில் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த நாம் செய்த அனைத்து கடின உழைப்பையும் பணயம் வைக்க முடியாது.
One really important note that must not be missed as Plan B is lifted:
— Mayor of London, Sadiq Khan (@MayorofLondon) January 21, 2022
Face coverings will remain mandatory on TfL services unless you’re exempt.
We cannot risk undoing all the hard work we've done to stop this virus in its tracks. Please keep wearing your mask.
தயவுசெய்து தொடர்ந்து முகக்கவசம் அணியுங்கள் என லண்டன் மேயர் சாதிக் கான் அறிவுறுத்தியுள்ளார்.