முகத்தில் உள்ள குழிகளை நீக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், குழிகள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே முகத்தில் உள்ள குழிகளை நீக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 5 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1
- சிட்டிகை தயிர்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள குழிகள் நிரந்தரமாக மறையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |