துபாய் பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
துபாய் தெற்கு பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது. உலகிலேயே மிகவும் அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரங்களில் ஒன்றாகும். இது ஒரு சுற்று தளமாகவும் காணப்படுகின்றது.
பலருக்கும் துபாயில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும். இத்தகைய துபாய் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள பல விடயங்கள் காணப்படுகின்றன. அது பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
0% குற்றம்
துபாய் மிகவும் பாதுகாப்பான நகரங்களுள் ஒன்று. அதாவது இங்கு குற்றங்கள் மிகக்குறைவு. இதற்கு அங்குள்ள கடுமையான சட்டங்கள் தான் காரணம் என் கூறலாம்.
0% வருமான வரி
பணக்காரராக விரும்பினால் துபாய்க்கு செல்லலாம். இங்கு வருமான வரி என்பதே கிடையாது. அதாவது உழைத்து சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் நீங்களே வைத்துக்கொள்ளலாம்.
20% கிரேன்கள்
உலகில் உள்ள மிகவும் பெரிய மற்றும் உயரமான கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் துபாயில் தான் உள்ளது. இந்த நாட்டில் தான் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இதனால் 20% கிரேன்கள் இங்கு இயக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் தொகை
துபாயில் வாழும் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இங்கு 17% மக்கள் தான் எமிரேட்ஸை சேர்ந்தவர்கள். மீதமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
கட்டிடங்கள்
உலகில் உள்ள மிகவும் உயரமான வானளாவிய கட்டிடங்களுள் சில துபாயில் உள்ளன. அதில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா 2,717 அடி உயரத்தைக் கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |