டு பிளெசிஸ் குறித்து சிஎஸ்கே சிஇஓ வெளியிட்ட முக்கிய தகவல்!
காயத்தில் அவதிப்பட்டு வந்த சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் டு பிளெசிஸ் குறித்து சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டம் (செப்டம்பர் 19) இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் மோதுகின்றன.
கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் பொது சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெசிஸ் காயமடைந்தார்.
டு பிளெசிஸ் காயமடைந்தது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
எனினும், காயத்திலிருந்து குணமடைந்த டு பிளெசிஸ், உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்துப்படுவார் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், டு பிளெஸ்ஸிஸ் உடற்தகுதி குறித்து சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, டு பிளெஸ்ஸிஸ் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதை காசி விஸ்வநாதன் உறுதிசெய்துள்ளார்.
இன்று இரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட டு பிளெஸ்ஸிஸ் உடற்தகுதியுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார்.