ஜேர்மனியில் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் விற்ற தம்பதியர்
ஜேர்மனியில், போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் விற்றதாக ஒரு தம்பதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Baden-Württembergஇல் உள்ள அந்த தம்பதியின் வீட்டில், ஏராளம் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சான்றிதழ்கள் சிலவற்றில், அந்த சான்றிதழை வைத்திருப்பவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதாக அச்சிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 31 வயது நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியாகிய 34 வயது பெண் காவல் நிலைய சம்பிரதாயங்களைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இப்படி ஒரு தம்பதியர் போலி கொரோனா சான்றிதழ்களை விற்று வருவதாக துப்புக்
கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களது வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது அவர்கள்
சிக்கினர்.
ஜேர்மனி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு சலுகைகள் அளித்துள்ள
நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த தம்பதியர் பணம் பார்த்துள்ளது
குறிப்பிடத்தக்கது.