ஜேர்மனி வெள்ளத்தைவிட அதிக அச்சத்தை உருவாக்கிய போலி செய்திகள்: உண்மையை விளக்கும் வீடியோ
ஜேர்மனி, பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான பல செய்திகள் ஜேர்மானியர்களை அச்சத்தில் ஆழ்த்தின.
அவற்றில் ஒன்று Wuppertalsperre என்ற இடத்தில் அமைந்துள்ள அணை ஒன்று உடைந்துவிட்டதாகவும், வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாகவும் கூறிய ஒரு வீடியோ.
ஏற்கனவே வெள்ளத்தின் கோர முகத்தைக் கண்டு நடுங்கிப்போயிருந்த ஜேர்மன் மக்கள் பதறிப்போனார்கள். இதேபோல பல செய்திகள் ஜேர்மன் வெள்ளத்தின்போது பரப்பப்பட்டுள்ளன. உண்மையில் அந்த வீடியோவில் காணப்படுவது வேறு ஒரு அணை.
ஆகவே, பொலிசார் தெருத்தெருவாக சென்று அது போலியான செய்தி என்றும், மக்கள் பயப்படவேண்டாம் என்றும் அறிவிக்கவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதேபோல், ஜேர்மனி வெள்ளத்தின்போது வெளியான பல வதந்திகளையும், அவை குறித்த உண்மையையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.