ஜேர்மனியில் ஒரே வீட்டில் ஐவர் கொலையில் திடுக்கிடும் திருப்பம்
ஜேர்மனியில் ஒரே குடும்பத்தில் 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
தலைநகர் பெர்லினுக்கு தெற்கே Koenigs Wusterhausen நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் 2 தினங்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது முக்கிய திருப்பமாக, இந்த கொலையின் முக்கிய நோக்கம் மற்றும் யார் கொலை செய்துள்ளார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சனிக்கிழமையன்று, சந்தேகத்தின்பேரில் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் குறித்த வீட்டுக்கு சோதனை செய்ய சென்றனர். அப்போது, அந்த குடியிருப்புக்குள் 3 குழந்தைகள் உட்பட மொத்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலங்களைக் கண்ட பொலிஸார், பலியான அனைவரும் துப்பாக்கியால் சுடபட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் அதிகாரிகள், கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியதாகவும், அதில் அந்த ஜேர்மானியரின் மனைவி தமது தடுப்பூசி சான்றிதழலை போலியாக தயாரித்ததாகவும், இதனால் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு பயந்து, தமது பிள்ளைகள் கைவிடப்படலாம் என அஞ்சி இந்த பகீர் முடிவை மேற்கொண்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.