நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்கள்: சில தகவல்கள்
Families of 33 missing Britons rush to Nepal: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான பிரித்தானியர்களைத் தேடி அவர்களுடைய குடும்பத்தினர் பலர் நேபாளத்துக்குப் புறப்பட்டுள்ளனர்.

புனித யாத்திரைக்காகவும், சுற்றுலாவுக்காகவும் ஏராளமான மக்கள் நேபாளத்துக்குச் சென்றிருந்த நிலையில், நேபாள திபெத் எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம், அவர்களில் பலருடைய நிலைமையை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது.
மாயமான பிரித்தானியர்கள்
நேபாள பெருவெள்ளத்தில் சுமார் 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 1,500 பேருக்கும் மேலானவர்களைக் காணவில்லை.

அவர்களில் 33 பிரித்தானியக் குடிமக்களும் அடங்குவர். விடயம் என்னவென்றால், தங்கள் உறவினர்கள் நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய விடயம் அவர்களை விட்டு தொலைவில் இருக்கும் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், அவர்களில் மாயமானவர்கள் நிலை என்ன என்னும் விடயம் கூடுதல் கவலையை உருவாக்கியுள்ளது.

விடயம் என்னவென்றால், காணாமல் போனவர்களில் யாரும் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
என்றாலும், சசெக்ஸில் நேபாள உணவு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ப்ரமோத் (Pramod Poudel) என்பவர், தன் தந்தையாகிய புருசோத்தம் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், எசெக்ஸில் செவிலியராக பணியாற்றும் ராஜேந்திரா (Rajendra Pudasaini) என்பவரோ, தனது குடும்பத்தில் பலர் காணாமல் போய்விட்டதாகவும், தனது ஞானக்குழந்தையின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை என்னவென்றால், மின்சாரமும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள் பலரும்.

இதற்கிடையில், தங்கள் உறவினர்களின் நிலை அறிவதற்காக மாயமான பிரித்தானியர்களின் உறவினர்கள் நேபாளத்துக்கே புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |