சந்தித்த கடும் துயரத்தை அடுத்து பிரித்தானிய குடும்பம் ஒன்று விடுத்த எச்சரிக்கை
பிரித்தானியாவில் e-scooter ஒன்றில் பயணித்த நபர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள நிலையில், தலைக்கவசம் கட்டாயம் என அந்த குடும்பம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
e-scooter கட்டுப்பாட்டை இழக்க
பிரித்தானியாவின் Wollaton பகுதியில் வசித்து வந்த 45 வயது Mohit Singraur என்பவரே, தமது 10 வயது மகனை பாடசாலையில் இருந்து அழைத்துவரும் பொருட்டு அவசரமாக தனது e-scooter-ல் பயணித்துள்ளார்.
இந்த நிலையில் e-scooter கட்டுப்பாட்டை இழக்க விபத்தில் சிக்கியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு நடைபாதையில் தலை பலமாக மோதியுள்ளது. ஏப்ரல் 23ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் Mohit Singraur ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவயிடத்தில் முதலுதவிகள் அளிக்கப்பட்டு உடனடியாக Queens Medical Centre-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் 5 நாட்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காயங்கள் காரணமாக ஏப்ரல் 28ம் திகதி மரணமடைந்துள்ளார்.
எவருக்கும் வேண்டாம்
மோஹித்தின் மரணம் அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. அத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களில் பயணிக்கும் போது தலைக்கவசம் கட்டாயம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
மோஹித்தின் மனைவி நிகிதா தெரிவிக்கையில், மோஹித் கனிவான, அக்கறையுள்ள கணவர் மற்றும் தந்தை. அவர் எப்போதும் தேவைப்படுபவர்களுக்கு முதலில் உதவும் குணம் கொண்டவர் என்றார்.
இதுபோன்ற நிலை எவருக்கும் வேண்டாம் என குறிப்பிட்டுள்ள நிகிதா e-scooter பயன்படுத்தும் போது தலைக்கவசம் கட்டாயம் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிகள் தொடர்பில் தெரிந்துகொள்வதும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |