ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் உணவகத்தில் இருந்து மாயமான குடும்பம்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு 8 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று சுமார் ரூ 34,000 கட்டணம் செலுத்தாமல் மாயமாகியுள்ளது.
வெட்கமில்லையா
குறித்த உணவ உரிமையாளர் தொடர்புடைய சம்பவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து, வெட்கமில்லையா எனவும் கேள்வி எழுப்பிய நிலையிலேயே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
8 பேர்கள் கொண்ட அந்த குழுவில் பெண் ஒருவர் தமது வங்கி அட்டையில் இருந்து பணத்தை செலுத்த முயன்றுள்ளார், ஆனால் இருமுறை அந்த அட்டை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமது மகனை அந்த உணவகத்தில் விட்டுவிட்டு இன்னொரு அட்டையுடன் வருவதாக கூறி, குறித்த பெண் உணவகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
பொலிசாரிடம் புகார்
ஆனால் சிறிது நேரத்தில் அந்த மகனுக்கு தொலைபேசி அழைப்பு வர, தாம் உடனே செல்ல வேண்டும் என குறிப்பிட்டு, அவனும் வெளியேறியதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, முன்பதிவு செய்வதற்காக அந்த குடுபம் அளித்திருந்த தொடர்பு இலக்கமும் போலி என அறிந்த நிலையில், அந்த உணவக உரிமையாளர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், பணம் செலுத்த முயன்ற பெண் மற்றும் அவரது மகன் ஆகியோரின் கண்காணிப்பு கமெரா பதிவையும் சமூக ஊடக பதிவில் இணைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சமூக ஊடக பயனாளர்கள் பலர் அந்த குடும்பத்தினரை விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |