சிதைந்து போன அழகிய குடும்பம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை... சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள்
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மார்லிமந்து பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சந்திரன் (42). இவர் மனைவி கீதா (35) மகள் ரக்க்ஷிதா(16) மகன் விஸ்வந்தர் (12) ஆகியோருடன் மார்லிமந்து பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் 2 மாடுகள் மற்றும் குத்தகை நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் சந்திரனின் உரவினரான நந்தகுமார் என்பவருக்கு அலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு சந்திரன் வீட்டில் யாரும் இல்லாததால் மாடு கத்துவதாகவும் கூறியதின் பேரில் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்துள்ளார்.
சந்திரன் வீட்டு கதவு உள் தாழ் இட்டத்தால் சந்தேகமடைந்த நந்தகுமார் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் துறையின் உதவியோடு பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது சந்திரன் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கயிறால் தூக்கிலிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தம்பதியின் மகள் ரக்க்ஷிதா, மகன் விஸ்வந்தர் ஆகியோர் வாயில் நுறை தள்ளியபடி சடலமாக கிடக்க அவர்கள் அருகில் பூச்சு கொல்லி மருந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு கடன் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் சந்திரன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.