வெளிநாடொன்றில் செய்த சிறு தவறால் காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்
துபாய்க்கு சுற்றுலா சென்ற பிரபல நடிகை ஒருவர் காவலில் அடைக்கப்பட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகியதாக தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், அவர் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி!
காவலில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை
சில இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததுடன், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் சோபியா ஹயத் (Sofia Hayat, 39).
இந்திய மற்றும் பாகிஸ்தான் பின்னணி கொண்ட, பிரித்தானியரான சோபியா துபாய்க்கு சுற்றுலா சென்றபோது, தன்னை அங்குள்ள பொலிசார் பிடித்து காவலில் அடைத்தது குறித்த ஒரு சம்பவத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி துபாய் சென்ற சோபியாவை, விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளார்கள் அந்நாட்டு பொலிசார்.
காரணம் எதுவும் கூறாமல், ஒரு சிறிய ஜன்னல் மட்டும் கொண்ட சிறிய அறை ஒன்றில் ஆறு மணி நேரம் அடைக்கப்பட்ட சோபியா, அதற்குப் பிறகு மற்றொரு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஆறு மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
என்ன காரணம்?
விடயம் என்னவென்றால், சோபியாவின் முன்னாள் காதலர் அவரிடம் 5,000 பவுண்டுகள் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கவில்லையாம்.
ஆகவே, நீ எனது பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் நீ செய்ததை சமூக ஊடகத்தில் வெளியிடுவேன் என அவருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் சோபியா.
அவரது முன்னாள் காதலர் பொலிசில் புகாரளிக்க, பொலிசார் சோபியா தன் முன்னாள் காதலரின் பாலியல் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டுவதாக எண்ணி அவரைக் கைது செய்துள்ளனர்.
அதாவது, அவதூறாக செய்தி வெளியிடுவது துபாயில் பயங்கர குற்றம். அதற்கு 2 ஆண்டுகள் சிறையும், 50,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்படும்.
பின்னர் சோபியாவின் மொபைலை ஆராய்ந்த பொலிசார், அதில் அவர் தன் முன்னாள் காதலருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளிலிருந்து, அவர் தன் முன்னாள் காதலருக்கு கடன் கொடுத்ததும், அவர் சோபியாவை ஏமாற்றியதும் உண்மைதான் என்பதை புரிந்துகொண்டு அவரை காவலிலிருந்து விடுவித்துள்ளார்கள்.
ஆனால், அவரது பாஸ்போர்ட்டை அவர்கள் திருப்பிக் கொடுக்காததால் வடாகைக்கு அறை எடுத்து தங்கவேண்டியிருந்திருக்கிறது சோபியாவுக்கு. வருவாயும் இழந்து இரண்டு மாதங்கள் துபாயில் கஷ்டப்பட்ட சோபியா, துபாயைக் குறித்து இன்ஸ்டாகிராமிலும் டிக்டாக்கிலும் அந்நாடு கவர்ச்சிகரமான, நாகரீகமான, செல்வச்செழிப்புள்ள அருமையான நாடு என விளம்பரம் செய்கிறார்கள்.
ஆனால், அதெல்லாம் பொய், உண்மையில் அது ஒரு நரகம், இனி ஜென்மத்துக்கும் துபாய்க்குச் செல்லவே மாட்டேன் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |