பிரபல பாடலாசிரியர் மாரடைப்பால் மரணம்
பிரபல பாடலாசிரியரான லலிதானந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 47.
தமிழகத்தின் நாகலாபுரத்தை சேர்ந்தவர் லலிதானந்த், இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
நா.முத்துக்குமாரின் நண்பரான லலிதானந்த், சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளார், அதிலும் ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ’என் வீட்டுல நான் இருந்தேனே’ என்ற பாடல் பிரபலமான ஒன்று.
கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த லலிதானந்த், டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமான நிலையில், இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இத்தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, லலிதானந்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.