விமானத்தில் பிரசவம் பார்த்து பிரபலமான இந்திய வம்சாவளி செவிலியர் மரணம்
கடந்த 2021ஆம் ஆண்டில் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த இந்திய வம்சாவளி செவிலியர், பிரித்தானியாவில் மரணமடைந்தார்.
திடீர் மரணம்
கேரளாவை சேர்ந்த பிரதீபா கேசவன் என்ற செவிலியர், கடந்த இரண்டு வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.
இவர் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜில் உள்ள அட்டென்போர்க்கே என்ற மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
@om manoramma
இந்நிலையில் திடீரென இவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக, அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கேரளாவிலுள்ள தனது குடும்பத்தை பார்ப்பதற்காக, இந்தியா கிளம்ப தயாராக இருந்த பிரதீபா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விமானத்தில் பிரசவம்
பிரதீபா கடந்த 2021ஆம் ஆண்டில் விமானத்தில் ஒரு பெண்ணுக்கு, அவசர சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த சம்பவத்தால் அனைவராலும் அறியப்பட்டவராவார். இவர் கேரளாவின் பதனமத்திடா மரியா பிலிப் என்ற பெண்ணுக்கு விமானத்தில் பிரசவம் பார்த்தார்.
@getty images
இந்நிலையில் லண்டனில் தனது தோழிகளுடன் வெளியே சென்றிருந்த பிரதீபா வர தாமதமானதை அடுத்து, அவரது எண்ணுக்கு பிரதீபாவின் சகோதரி போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கேரளாவின் குமரகம் பகுதியை பூர்வீகமாக கொண்ட பிரதீபா உயிரிழந்த சம்பவம், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.