கால்பந்து போட்டியில் தோன்றிய இளவரசர் வில்லியம்.. இழிவான செயலில் ஈடுபட்ட ரசிகர்களால் பரபரப்பு!
கால்பந்து போட்டியில் இளவரசர் வில்லியம் தோன்றியபோது ரசிகர்கள் கூக்குரலிட்டு கேலி செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஓய்வு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், 49 சதவீதம் பேர் ஓய்வு பெற வேண்டாம் என்றும், 34 சதவீதம் பேர் பெற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ராணி எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக பாராளுமன்றத்தை திறப்பதில் இருந்து விலகிய நிலையில், ராயல் வின்ட்சர் குதிரை கண்காட்சிக்கு சென்றதன் மூலம் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியான லிவர்பூல் மற்றும் இத்தாலி அணியான செல்சியா மோதிய பா கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டி Wembley மைதானத்தில் நடந்தது.
An unexpected moment at today's #FACupFinal, where Liverpool fans booed Prince William and National Anthem. My understanding (correct me if I'm wrong, Twitter) is that it's still felt there was an establishment cover-up over the Hillsborough disaster and getting justice for it. pic.twitter.com/uFLAJEJp30
— Omid Scobie (@scobie) May 14, 2022
போட்டி தொடங்குவதற்கு முன்பாக கால்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கும் இளவரசர் வில்லியம் மைதானத்தில் தோன்றினார். அவர் வரிசையாக நின்றிருந்த வீரர்களுக்கு கை கொடுக்கும்போது, லிவர்பூல் ரசிகர்களில் பலர் கூக்குரலிட்டு கேலி செய்தனர். அத்துடன் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது அந்த கூச்சலும், கேலியும் உச்சத்தை தொட்டது. எபிட் வித் மீ என்ற கிறித்துவ கீதத்தையும் அவர்கள் கேலி செய்தனர்.
ராணி எலிசபெத் மீதான அதிருப்தியின் காரணமாக ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது இளவரசரை அவதிமதிக்கும் மற்றும் இழிவான செயல் பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
போட்டிக்கு முடிந்த பிறகு, இளவரசர் வில்லியம் வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். அப்போது எந்தவிதமான கூச்சலும் நிகழ்த்தப்படவில்லை.