RCB வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
RCB வெற்றி கொண்டாட்டம்
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் RCB அணி, PBKS அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.
18 வருட ஐபிஎல் வரலாற்றில், முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றதால், நாடு முழுவதும் RCB ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் நடைபெற இருந்த திறந்த வெளி பேருந்து பேரணி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் கோப்பையுடன் விமான நிலையம் வந்த RCB அணி வீரர்களை, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சென்று வரவேற்றார்.
வெற்றி விழாவிற்கு முன்னதாக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க சென்ற RCB வீரர்களுக்கு ரசிகர்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
8 பேர் உயிரிழப்பு
இதனையடுத்து, சின்னசாமி மைதானத்தில் வீரர்களை காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை லேசான தடியடி நடத்தியது. கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
Tragedy at #ChinnaswamyStadium: 3 Feared Dead, 10 Injured in Stampede During #RCB Victory Celebrations
— BNN Channel (@Bavazir_network) June 4, 2025
A tragic incident marred the celebrations of Royal Challengers Bengaluru’s IPL 2025 victory, as a stampede-like situation outside the iconic M. Chinnaswamy Stadium claimed at… pic.twitter.com/ZqYhDJ28hm
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததற்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
RCB அணியின் வெற்றிகொண்டாட்ட நிகழ்வில் உயிரிழப்பு ஏற்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |