பணிந்தது இந்திய அரசு! மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு
மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம் என்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன் போது பிரதமர் மோடி விவசாயிகளின் வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.
#WATCH | We have decided to repeal all 3 farm laws, will begin the procedure at the Parliament session that begins this month. I urge farmers to return home to their families and let's start afresh: PM Narendra Modi pic.twitter.com/0irwGpna2N
— ANI (@ANI) November 19, 2021
ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு வீட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என போராடி வந்த நிலையிலேயே மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனிடையில் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்கள் திரும்ப பெறுவது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸின் ராகுல் காந்தி, நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.