பெர்லின் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த விவசாயிகள்...
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாடு முழுவதிலுமிருந்து ட்ராக்டர்களுடன் குவிந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பெர்லின் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்த விவசாயிகள்...
திங்கட்கிழமையன்று, நாடு முழுவதிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ட்ராக்டர்களுடன் குவிந்தார்கள்.
அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அவர்கள் பெர்லினில் ஒன்று திரண்டார்கள்.
Image: Fabian Sommer/dpa/picture alliance
அரசின் நடவடிக்கையால், விவசாயிகளுக்கு ஒரு பில்லியன் யூரோக்கள் அளவுக்கு செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு என்ன சொல்கிறது?
ஆனால், ஜேர்மனியை ஆளும் கூட்டணி அரசோ, அரசின் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஏற்படவிருக்கும் பாதிப்பை சரி செய்ய 17 பில்லியன் யூரோக்கள் தேவை என்கிறது.
Image: Fabian Sommer/dpa/picture alliance
கொரோனா உதவி நிதியை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என ஜேர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அந்த நிதி பட்ஜெட்டில் ஏற்படவிருக்கும் இழப்பை ஈடு செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.
நீதிமன்ற உத்தரவே, (மரம் வெட்டுதல் போன்ற)பருவநிலையை பாதிக்கும் நிதி உதவிகளை நிறுத்த காரணமாக அமைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், மானியம் மற்றும் வரிச்சலுகைகளை நிறுத்தினால், ஜனவரி முதல் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவர்களுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: Fabian Sommer/dpa/picture alliance
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |