2 மணி நேரத்தில்.. தடுப்பூசி செலுத்தி கொண்ட முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் குடும்பத்தினர்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட முதியவர் ஒருவர் 2 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ரவுண்டானா பகுதியில் வசித்து வந்தவர் ராஜா. இவர் தனது சொந்தமாக உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் காந்திஜி நகரில் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
அதில் ராஜா கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தார். இவருடன் மகள் நாகலட்சுமியும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
இதன் பிறகு வீட்டிற்கு சென்ற ராஜாவிற்கு இரண்டு மணி நேரத்தில் திடீரென மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி வெறும் இரண்டே மணி நேரத்தில் விவசாயி மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.