அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் 9 வயது சிறுமியும், அவரது தந்தையும் இறந்து கிடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சடலமாக தந்தை, மகள்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் ப்ரூக்லெட் நகரில் உள்ள பூங்காவில் கார் நின்றிருந்தது.
அதனுள் சிறுமி மற்றும் அவரது தந்தை இருவரும் சடலமாக இருந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தந்தை மற்றும் மகளின் உடல்களை மீட்டபோது, அந்நபரின் மடியில் ஒரு கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர் முன் இருக்கையில் சுயமாகத் தாக்கிக் கொண்ட காயத்தில் இருந்து கிடந்தார்.
மேலும், பின் இருக்கையில் சிறுமி துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இருந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அந்நபரின் பெயர் ஜேம்ஸ் லீ மேயோ என்றும், அவரது மகள் 9 வயதான எமிலி கிரேஸ் என்றும் தெரிய வந்தது.
ஒரே துப்பாக்கி?
தந்தை மற்றும் மகள் இருவரையும் கொல்ல ஒரே துப்பாக்கி அல்லது தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதா என்பதை அதிகாரிகள் கூறவில்லை.
முன்னதாக, கலிபோர்னியாவில் தந்தை ஒருவர் தனது 9 வயது ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனை சுட்டுக்கொன்றார்.
அந்த சம்பவம் நிகழ்ந்து சில மாதங்களுக்குப் பிறகு இந்த பேரழிவு நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |