ஒரே சமயத்தில் காவலர் பணியில் சேரும் தந்தை மற்றும் மகன்
உத்தரபிரதேச மாநிலத்தில் தந்தையும், மகனும் ஒரே சமயத்தில் காவலர் பணியை பெற்றுள்ளனர்.
காவலர் பணி
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், மேற்குப் பகுதியில் உள்ள ஹாப்பூரில் இருக்கும் உதய்பூர் நங்லா கிராமத்தைச் சேர்ந்தவர் யஷ்பால் பவுஜி (40). இவரது மகன் சேகர் நாகர் (19).
இதில், யஷ்பால் தனது 18 வயதில் ராணுவத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் 18 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2019-ம் ஆண்டில் தான் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இவர் உபியின் காவல்துறையில் சேர விரும்பியுள்ளார். அதேபோல இவரது மகனும் உபியின் காவல்துறையில் சேர முயன்று வந்தார்.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இருவரும் காவலர் தேர்வெழுதி தேர்வாகி விட்டனர்.
இவர்கள் இருவரும் காவல் பணிக்கான சேர்க்கைக் கடிதத்தை லக்னோவில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். இதனால் இவர்களது குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |