நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண்: 17 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை, தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி
மகாராஷ்டிராவின் சாங்கிலியைச் சேர்ந்தவர் தோண்டிராம் போன்ஸ்லே. பாடசாலை ஒன்றின் முதல்வராக இவர் பணியாற்றி வந்தார்.
இவரது 17 வயது மகள் சாதனா, 10ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் 92.60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்கான மாதிரித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தார்.
ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். இது அவரது தந்தை தோண்டிராமிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன் மோசமாக தாக்கியுள்ளார். இதில் மகள் சாதனாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
பரிதாப உயிரிழப்பு
உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பெறுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.
இதனையடுத்து மாணவியின் தாய் பொலிஸில் புகார் அளித்தார். குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மகளையும், தடுக்க சென்ற தன்னையும் கணவர் தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
கணவரின் தாக்குதலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகள் உயிரிழந்ததாகவும் கூறியிருந்தார்.
பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட தோண்டிராம் கைது செய்யப்பட்டார். பொலிஸ் காவலில் உள்ள அவரது வழக்கு விசாரணையில் உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |