பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய குழந்தைகள்: காப்பாற்ற முயன்று உயிரிழந்த தந்தை
பிரித்தானிய கடற்கரையில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை மற்றும் அந்நிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மூழ்கிய குழந்தைகள்
ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் சீட்டன் கேரு(Seaton Carew) கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென உருவான பெரிய அலையில் சிக்கி ஆபத்தான நிலைக்கு இழுத்து செல்லப்பட்டனர்.
பிற்பகல் 3.45 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, கடற்கரையில் இருந்த குழந்தைகளின் தந்தை மற்றும் அந்நிய நபர்கள் 3 பேர் உடனடியாக கடலுக்குள் இறங்கி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இறுதியில் கடலில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையிலும், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தை உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் குழந்தைகளை காப்பாற்ற முயன்ற தந்தை வெய்ன் டெய்லர் மற்றும் பெயர் தெரியாத மற்றொரு நபர் நீரில் மூழ்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த RNLI மீட்பு குழுவினர் இருவரையும் மீட்ட நிலையிலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என அறிவித்துள்ளனர்.
குழந்தைகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இரண்டாவது நபர், கடற்கரைக்கு தன்னுடைய செல்லப்பிராணியுடன் நடைபயிற்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |