மருமகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறிய மாமனார்.. வெளிச்சத்திற்கு வந்த பகிர் தகவல்
வேலூரில் மருமகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறிய மாமனாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொண்னை பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவரது கணவர் சதிஷ் குமார். இவர்களுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் இவர் ஒட்டனேரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தனது மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார். ஆதாவது எனக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடக்கும் வரை எனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது எனக்கு தெரியாது.
வீட்டுக்கு ஒரே மகன் சொத்து அதிகமாகவே இருக்கிறது என்று ஆசை வார்த்தை கூறி கல்யாணம் செய்து வைத்தார். இந்நிலையில் எனது மாமனார் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதை வெளியே சொன்னால் தனது தாயை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதே போல் தொடர்ந்து பலமுறை என்னை சீரழித்தாக கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.