மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார்
மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மாமனார் திருமணம் செய்ய உள்ளது அந்த குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது மகனுக்கு நிச்சயதார்த்தம்
உத்திரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் உள்ள பன்ஸ்நகரி கிராமத்தில் 55 வயதான ஷகீல் மற்றும் ஷபானா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 6 மகன்களும், 3 பேர குழந்தைகளும் உள்ளன.
இதில் தனது 15 வயது மகனுக்கு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணை நிச்சயம் செய்து வைத்துள்ளார்.
வயது வித்தியாசம் காரணமாக முதலில் இந்த நிச்சயத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தனது மிரட்டல்கள் மூலம், ஷகீல் இந்த நிச்சயத்தை நடத்தியுள்ளார்.
அதன் பின்னர், தனது வருங்கால மருமகளுடன் ஷகீல் தொடர்ந்து தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
ஒரு கட்டத்தில், ஷகீலின் தொலைபேசியை பார்த்த அவரது மகன், தான் திருமணம் செய்ய உள்ள பெண்ணுடன், தனது தந்தை காதலிப்பது பேசியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
வருங்கால மருமகளுடன் திருமணம்
இந்நிலையில், ரூ.2 லட்சம் பணம் மற்றும் 17 கிராம் தங்கத்துடன் வேலை நிமித்தமாக டெல்லி சென்ற ஷகீல், தனது குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து, தனது மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட ஷகீலின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
என் கணவர் நாள் முழுவதும் அவளுக்கு வீடியோ கால் செய்து கொண்டிருந்தார். முதலில் யாரும் என்னை நம்பவில்லை. பின்னர் நானும் என் மகனும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களைச் சேகரித்தோம்," என்று ஷகீலின் மனைவி ஷபானா தெரிவித்துள்ளார்.
மேலும், தனது தந்தை மற்றும் அந்த பெண்ணுக்கும் இடையேயான காதல், தனது தாத்தா மற்றும் பாட்டிக்கும் தெரிந்தே நடந்துள்ளது என அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |