தாய் இல்லாத நேரங்களில், பெற்ற மகளை தந்தையே..! கர்ப்பமாகி பிரசவம் ஆன பின் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை
இந்திய மாநிலம் குஜராத்தில் பெற்ற மகளை தந்தையே சீரழித்ததால், கர்ப்பமாகி குழந்தையை பெர்றேடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷிஹோர் நகரில் இந்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது சிறுமி கடந்த புதன்கிழமையன்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து ஷிஹோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
திருமணம் ஆகாத அப்பெண்ணிடம், பிறந்த குழந்தைக்கு யார் தந்தை என விசாரிக்கப்பட்டது. மனமுடைந்த அப்பெண், அவருக்கு நடந்த கொடுமைகளை விவரித்தார்.
கடந்த ஒரு வருடத்தில், அவரது தந்தை தனது தாய் இல்லாத நேரத்தில் அல்லது அவர் தூங்கும் நேரங்களில் பல முறை தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அவர் கர்ப்பமாகியுள்ளார், மேலும் அதனை யாரிடமும் சொல்லாமலே இருந்துள்ளார்.
தற்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் குழந்தை பிறந்த பிறகு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவமனை மூலமாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவரது தந்தை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைகள் பாவ்நகர் காவல்துறையின் பெண்கள் பிரிவுக்கு ஒப்படைக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு சகோதர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்கின்றனர்.
இந்த நிலையில் கடைசி மகளான இப்பெண் தனது தாய் தந்தையுடன் ஷிஹோர் நகரத்தில் வசித்து வந்தார் என்று அகமதாபாத் மிரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.