பெற்ற மகளை ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளால் வெட்டிய தந்தை! பின்னர் அவர் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் வெளிவந்த காரணம்
திருச்சியில் காதல் தகராறில் பெற்ற மகளை வெட்டி கொலை செய்து தந்தை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம்,சோமரசன் பேட்டை பகுதியில் வசிப்பவர் மூர்த்தி. இவர் அதே பகுதியில் வசித்து வந்த பிருந்தாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஒரு சில ஆண்டுகளில் அவரது மனைவி பிருந்தா தவறியதால் இரண்டாவது முறையாக லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் லதாவும் அவரது மகனும் ஒரு விழாவிற்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது மூர்த்தி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். ஒருபக்கம் கீர்த்தனா கை, கால்களில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
இதை கண்டு லதா அலறியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உயிருக்கு போராடி கொண்டிருந்த கீர்த்தனாவை கைப்பற்றி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தூக்கில் தொங்கிய மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனா ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.