இதயத்தை பச்சையாக தின்றவர்... கிளர்ச்சிப்படை முன்னாள் தளபதிக்கு சுவிஸில் சிறைத்தண்டனை

imprisonment war crime rebel officer
By Arbin Jun 19, 2021 12:30 PM GMT
Report

முன்னாள் லைபீரிய கிளர்ச்சிப்படை தளபதிக்கு சுவிட்சர்லாந்தில் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

முன்னாள் லைபீரிய கிளர்ச்சிப்படை தளபதியான 46 வயது Alieu Kosiah என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் 2014 முதலே சிறையில் இருப்பதால், எஞ்சிய காலம் மட்டும் அவர் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

தற்போது 46 வயதாகும் Alieu Kosiah லைபீரியாவில் Ulimo என்ற கிளர்ச்சிப்படையில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். Ulimo என்ற கிளர்ச்சிப்படைக்கும் முன்னாள் லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் என்பவரின் NPFL என்ற முன்னணிக்கும் இடையே நீண்ட கால சண்டை நடந்து வந்தது.

இந்த உள்நாட்டு போரினால் சுமார் 250,000 மக்கள் கொல்லப்பட்டதுடன், மில்லியன் கணக்கிலான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதில் போர் குற்றங்களுக்காக 2012ல் டெய்லர் 50 ஆண்டுகளுக்கு தண்டிக்கப்பட்டார்.

லைபீரியாவில் உள்நாட்டு போர் நடைபெறுவதற்கு இடையே 1998ல் சுவிட்சர்லாந்துக்கு வந்த Alieu Kosiah புகலிடம் கோரியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சுவிஸ் பெண்மணியை திருமணம் செய்து கொண்டதால், 16 ஆண்டுகளாக எவ்வித பிரச்சனையும் இன்றி லொசேன் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், Civitas Maxima என்ற அமைப்பு தாமாகவே முன்வந்து Alieu Kosiah மீது குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணையின் ஒருபகுதியாக கைது செய்யப்பட்ட Alieu Kosiah, கடந்த 2014 முதல் விசாரணை கைதியாக சிறையில் உள்ளார்.

Alieu Kosiah மீது கூட்டு துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை, சிறார்களை ராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பியது, கிராம மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்டது தொடங்கி, கிராம மக்களை அச்சுறுத்த இதயத்தை பச்சையாக தின்று சித்திரவதைக்கு உட்படுத்தியது உட்பட பலவேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதில் போதிய ஆதாரங்களை Civitas Maxima என்ற அமைப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அது நிரூபணமான நிலையில், தற்போது பெடரல் குற்றவியல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் 15 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்றவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் வழக்கு ஒன்று சுவிட்சர்லாந்தில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறையாகும். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US