தமிழகம் TO இலங்கை கப்பல் பயணம் தொடங்குகிறது! கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் உள்ளே
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. பின்பு, தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்றது.
அதன்படி, கடந்த 20-ம் திகதி தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ.வேலு துறைமுகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, குடியுரிமை, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது போன்றவற்றிற்கு தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன.
அதுமட்டுமல்லாமல், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்து தொடர்பான பல்வேறு பணிகளுக்கு டெல்லி சென்று அதிகாரிகள் பயிற்சி பெற்று வந்தனர்.
வெறும் ரூ.6,500 செலவு
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சியில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று, முடிவடைந்து ‘சிரியா பாணி’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் 3.30 மணி நேரத்தில் இலங்கை செல்லலாம். இதற்கான பயண கட்டணம் 18% ஜி.எஸ்.டியுடன் ஒருவருக்கு ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |