2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த போது எப்படி இருந்தது? வெளிப்படுத்திய இலங்கை வீரர்
2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தனக்கு கிடைத்த அனுபவத்தை இலங்கை வீரர் அஞ்சலே பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள கடாபி மைதானத்திற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னணி அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதைத் தவிர்த்தன.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, இன்று முதல் ஒரு நாள் போட்டி தொடங்கவிருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தால் காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது.
கடைசியாக 2003 ஆம் ஆண்டின் இறுதியில் நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இங்கிலாந்து, 48 மணி நேரத்திற்குள் தங்கள் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம், 10 வருடங்களுக்கு பிறகு 2019 ஆம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
இதன் பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் மீண்டும் திரும்பும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்து ரசிகர்களுக்கு நியூசிலாந்தின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பாதுகாப்பாக உணர்ந்ததாக இலங்கை வீரர் அஞ்சலே பெரேரா வெளிப்படுத்தியுள்ளார்.
அஞ்சலே பெரேரா ட்விட்டரில் பதிவிட்டதாவது, 2 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தோம், நாங்கள் தங்கிய ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் ரசித்தேன்.
உண்மையில் மிகவும் வரவேற்கப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தேன். எந்தவித சந்தேகமும் இருந்ததில்லை.
Toured @TheRealPCB 2 years back and really enjoyed every minute of our stay!! Felt extremely welcomed and also safe tbh! Never had any doubt❤️ Genuinely wanna see cricket return to this great nation! @danushka_70 @dasunshanaka1 pic.twitter.com/ovjroZbXx9
— Angelo Perera (@angiperera) September 17, 2021
உண்மையாகவே இந்த சிறந்த தேசத்திற்கு (பாகிஸ்தானுக்கு) கிரிக்கெட் திரும்புவதை பார்க்க வேண்டும் என அஞ்சலே பெரேரா கூறியுள்ளார்.