இதை நீ கட்டாயம் செய்யனும்! தொடர் தொல்லையால் இளம் பெண் மருத்துவர் தற்கொலை
இந்தியாவில் சக மருத்துவரின் துன்புறுத்தலை தாங்க முடியாத பெண் பல் மருத்துவர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
பெண் மருத்துவருக்கு தொல்லை
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்ஷி திரிபாதி. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் பணிபுரியும் சக மருத்துவரான சுமித், பெண் மருத்துவரை தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்க வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிரியங்ஷியை சுமித் துன்புறுத்திய நிலையில் பெண் மருத்துவர் காதலை ஏற்கவில்லை.
IANS
தற்கொலை
இதோடு பிரியங்ஷியை புகைப்பிடிக்க வேண்டும், மது அருந்த வேண்டும் என சுமித் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சுமித்தின் பேச்சுக்கு பெண் மருத்துவர் செவி கொடுக்காததால் ஆத்திரத்தில், பெண்ணின் நடத்தையை பற்றி சுமித் அவதூறு பரப்பினார்.
இதனால் மனமுடைந்த பிரியங்ஷி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஜனவரி 25ஆம் திகதி நடந்துள்ளது.
இது குறித்து பெண் மருத்துவரின் பெற்றோர் கொடுத்த புகாரில் பொலிசார் விசாரணையை தற்போது துரிதப்படுத்தியுள்ளனர்.