எனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம்.., 21-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்
25 வயதேயான ஐ.டி. பெண் ஊழியர் 21ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்த 25 வயதேயான ஐ.டி. பெண் ஊழியர் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே. இவர் 21ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் , அதிகாலை 4.30 மணியளவில் அவருடைய தோழி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
பின்னர் திடீரென அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் 21ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை. நான் இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |