வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம்.., பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்
வயலில் கிடைத்த வைரக்கல்லால் பெண் விவசாயி ஒருவர் ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறியுள்ளார்.
பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் சில தினங்களாகவே மழை பெய்தது.
இந்நிலையில். அப்பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு மின்னுகின்ற வகையில் ஒரு பொருள் கிடைத்தது.
அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பலரும் அதனை வாங்குவதற்கு முன்வந்தனர்.
அப்போது அந்த பெண் விவசாயி வைரத்திற்கு ரூ.18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.
இந்நிலையில், சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். அங்கு சுற்றியுள்ள பகுதியில் வைரம் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |