ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ
இந்தியாவில் ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்த பெண்ணை மின்னல் வேகத்தில் பெண் காவலர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மும்பை மாவட்டத்தில் உள்ள பைக்குல்லா ரயில் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மகளுடன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் ஏறுவதற்கு முன்பு ரயில் கிளம்பியதால் ஓடும் ரயிலில் எற முயன்று தவறி கீழே விழுந்து விட்டார்.
ரயில் அவரை இழுத்து கொண்டு சில விநாடிகள் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உடனே துரிதமாக ஓடி சென்று அந்த பெண்ணை சக்கரத்திற்குள் சிக்காமல் காப்பாறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
भायखला रेलवे स्टेशन PF-01 पर एक 40 वर्ष महिला करीबन 20:03 बजे चलती लोकल ट्रेन में चढने का प्रयास करते समय संतुलन बिगङने के कारण चलती लोकल से गिरते समय स्टेशन पर तैनात ऑन डियुटी महिला आरक्षक सपना गोलकर द्वारा उक्त महिला यात्री की जान बजाकर सराहनीय कार्य किया गया । @RailMinIndia pic.twitter.com/EqX2vMUu0A
— Central Railway (@Central_Railway) November 21, 2021
மின்னல் வேகத்தில் செயல்பட்டு துரிதமாக பெண்ணை காப்பாற்றிய பெண் காவலரின் பெயர் சப்னா கோல்கர் என்று தெரியவந்துள்ளது. சப்னா கோல்கருக்கு பலரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.