தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் பானம்.., தினமும் காலையில் குடிக்கலாம்
தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் பாணத்தை தினமும் காலையில் குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்
- பெருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- தண்ணீர்- 1 கிளாஸ்
தயாரிக்கும் முறை
முதலில், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை நன்கு கழுவி உலர வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து கொதிக்க வைக்கவும்.
அடுத்து தண்ணீர் கொதித்தவுடன், அதில் பெருஞ்சீரகம் மற்றும் சீரக விதைகளைச் சேர்க்கவும்.
இப்போது அதை 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம்.
கிடைக்கும் பயன்கள்
பெருஞ்சீரகம் நமது செரிமான அமைப்பை அமைதிப்படுத்துகிறது மற்றும் சீரகம் வாயுவை வெளியேற்ற உதவுகிறது.
பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் எடையும் குறையத் தொடங்கும்.
இது உடலில் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன, இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளில் நிறைந்துள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராட வலிமை அளிக்கின்றன.
மேலும், இந்த பெருஞ்சீரகம் மற்றும் சீரகக் கஷாயம் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |