உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் கலந்த தேநீரை குடிச்சாலே போதும்!
பொதுவாக நாம் பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சமையலறையில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் உதவும். மேலும், இது அனைத்து வயதினருக்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது.
அதுபோன்ற மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த மசாலாப் பொருட்களால் பானங்களைத் தயாரித்துக் குடிப்பதே உங்கள் உடலுக்கு சிறந்தது.
அந்தவகையில் தற்போது நோய் எதிர்ப்பு சக்தியை எளிய முறையில் அதிகரிக்க சூப்பரான பானம் ஒன்று எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் 1 கப்
- பெருஞ்சீரகம் விதைகள் 1/2
- தேக்கரண்டி சீரகம் 1/2 தேக்கரண்டி
- இஞ்சி 1/2 அங்குலம்
- சுவைக்கேற்ப தேன்
செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். இப்போது, அதில் பெருஞ்சீரகம், சீரகம், இஞ்சி சேர்க்கவும். பின்னர், மூடி 8-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்னர், உங்கள் பெருஞ்சீரகம் மற்றும் சீரக தேநீரின் சுவைக்கு ஏற்ப தேனுடன் கலந்துகொள்ளுங்கள்.
இப்போது சூடான சுவையான தேநீர் தயார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
நன்மைகள்
-
பெருஞ்சீரகம் விதைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
-
பெருஞ்சீரக தேநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இது வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
-
சீரக விதைகளில் இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வானிலை மாற்றத்தால் நோய்வாய்ப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.