காலணி வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை! கைதான பெண்..தப்பியோடிய கணவன்
இந்தியாவின் மும்பை நகரில் காலணி வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை தம்பதி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலணி தகராறு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தானேவின் நய நகரைச் சேர்ந்தவர் அப்சர் கத்ரி(54). இவருக்கும் பக்கத்து வீட்டு தம்பதிக்கும் காலணியை வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றியபோது அப்சர் மோசமாக தாக்கப்பட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
தப்பியோடிய கணவர்
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் குறித்த தம்பதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்தது. ஆனால் அவரது கணவர் தப்பியோடிவிட்டார்.
அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். காலணி வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.