நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு இந்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு இந்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்
நகைக்கடன்களை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு இந்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதாவது சிறிய அளவில் நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரூ.2 லட்சத்திற்கு குறைவாக நகைக்கடன் வாங்குபவர்களுக்கு விலக்கு அளிக்கவும் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த விதிகளை நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை தற்போது அமல்படுத்த வேண்டாம் என்றும் இந்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |