விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு பிரான்ஸ் அறிவித்துள்ள நிதி உதவி
விலைவாசி உயர்வால் தவிக்கும் குறைந்த வருவாய் கொண்ட பிரான்ஸ் மக்களுக்கு பிரான்ஸ் பிரதமர் நிதி உதவிகளை அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் பிரதமராக புதிதாக பொறுப்பேற்றுள்ள Elisabeth Borne, அந்த நிதியுதவி செப்டம்பர் மாதம் விநியோகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த நிதியுதவி செலுத்தப்படும் என்று கூறியுள்ள Elisabeth, நிதியுதவியாக எவ்வளவு வழங்கப்படும் என்பது போன்ற விவரங்களை வெளியிடவில்லை.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், முதலில் ஒரு குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படும் இந்தத் தொகை, நேரடியாக அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார் அவர்.