பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு முன் காணமல் போன மகன்! கண்டுபிடிக்க உதவும் படி கண்ணீர்
பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு முன் காணமல் போன மகனை கண்டுபிடிக்க உதவும் படி தாய் வேதனையுடன் கூறியுள்ளார்.
Frantisek Morris என்றழைக்கப்படும் அந்த இளைஞன் கடைசியாக கடந்த 02-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு தன்னுடைய சைக்கிளில் Conwy-யின் Caerhun பகுதியில் இருக்கும் பப்பில் கடைசியாக தென்பட்டுள்ளார்.
அதன் பின் அவர் காணவில்லை. இதனால் அந்த இளைஞனின் தாயார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். மேலும், அவர் தன் மகனுக்கு ஏதேனும் ஆகியிருக்க கூடும் என்று பயப்படுகிறார்.
18 வயதான அந்த இளைஞன் கடைசியாக சாம்பல் நிற சட்டை மற்றும் நீல நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். இது குறித்து அந்த இளைஞனின் தாயார் ஆலிஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எனது மகன் பிரான்கியைக் கண்டுபிடிக்க நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மிக்க நன்றி. நான் அதை எவ்வளவு பாராட்டுகிறேன் என்று கூட உங்களுக்குத் தெரியாது.
எனக்கு பிரான்கியை நன்றாகத் தெரியும், அவருடைய வாழ்க்கை முறையும் எனக்குத் தெரியும். அவர் பாங்கூரில் உள்ள தனது நண்பர்களில் ஒருவரைச் சந்தித்ததாக நான் நினைக்கிறேன், அங்கே அவருக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நடந்திருக்கலாம். நான் பாங்கூரில் தனக்குத் தெரிந்தவர்களை விசாரித்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனை செய்யும்படி பொலிசாரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,
ஆனால் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால், பாங்கூரில் உள்ள அவரது நண்பர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும். பிரான்கியின் சி.சி.டி.வி படம் அவரது முழங்கையிலும் முகத்திலும் காயங்கள் இருப்பது போல் காட்டுகிறது.
பொலிசார் தொடர்ந்து தனது மகனை தேடி வருகின்றனர். பொலிசாரும் மக்களின் உதவியை நாடியுள்ள நிலையில், அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை அறிவதே இப்போது எங்களுடைய வேலை.
பிரான்கி இருக்கும் இடத்தை அறிந்த யாரேனும் அறிந்திருந்தால், உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.