கேரளா அருகே நடுக்கடலில் சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து
இந்திய மாநிலமான கேரளா அருகே நடுக்கடலில் சென்ற சென்ற சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கப்பலில் பயங்கர விபத்து
கேரளா அருகே நடுக்கடலில் எம்.வி. வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து வந்த சரக்கு கப்பல் வரும் 10-ம் திகதி அன்று மும்பை துறைமுகத்தை சென்றடைய இருந்தது.
சுமார் 270 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கேரள மாநிலத்தின் கண்ணூர் துறைமுகம் அருகே வந்தபோது விபத்து நடந்துள்ளது.
பின்னர் இந்த தகவல் கடலோர காவல் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதில், கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அனைவரும் கடலில் குதித்ததாக சொல்லப்படுகிறது.
18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |