அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து.., உயிருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்த 3 பேர் உயிரிழப்பு
டெல்லியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
3 பேர் உயிரிழப்பு
இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று தீயை வேகமான அணைத்தனர். அப்போது, தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக 7-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்தனர்.
பின்னர், படுகாயமடைந்த மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தீ விபத்தில் இருந்து யாதவ் மனைவியும், மூத்த மகனும் உயிர் தப்பித்தனர். அவர்கள் தற்போது லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |