வித்தியாசமாக மது அருந்த விரும்பிய இளம்பெண்... தோழிக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்க மாணவி ஒருவர் தன் தோழியருடன் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். Marissa Daniel (26) என்னும் அந்த இளம்பெண்ணும் அவரது தோழியரும், சுற்றுலாவின் கடைசி நாளை பார்ட்டி வைத்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, மதுபான விடுதிக்கு சென்று மது அருந்தும்போது, ஒரு பெண் தீப்பற்றி எரியும் பானம் ஒன்றை அருந்த விரும்பியுள்ளார். அதன்படி அந்த பெண்ணுக்கு ஒரு தட்டில் வைத்து கொடுகப்பட்ட மதுபானத்தில் தீவைக்கப்பட்டுள்ளது.
அப்போது, அந்த தீயை சற்று அதிகரிப்பதற்காக பணியாளர் ஒருவர் இன்னும் கொஞ்சம் மதுபானத்தை ஊற்ற முயன்றபோது, அந்த போத்தல் மூடி கழன்று, மதுபானம் வேகமாக பீய்ச்சி அடித்துள்ளது. அந்த நேரத்தில், தன் தோழியின் தொடையில் சிறிது மதுபானம் சிந்தி தீப்பிடிக்கவே, அதை அணைக்க முயன்றுள்ளார் Marissa.
சரியாக அப்போது அந்த பணியாளர் ஊற்றிய மதுபானம் தீப்பிடிக்க, அருகில் நின்ற Marissa மீது தீப்பற்றியுள்ளது. அதில், Marissaவின் முகம், இடது காது மற்றும் இடது கை வெந்து போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள Marissa, தனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு அந்த மதுபான விடுதி ஊழியர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறியுள்ளார்.
தனக்கு 26 வயதாவதால் தனது தாயின் காப்பீட்டில் தனக்கு பங்கில்லை என்றும், தான்தான் மருத்துவ செலவுக்கு பணம் செலவழிக்கவேண்டியிருக்கும் என்றும் கூறுகிறார் Marissa. அத்துடன், அந்த மதுபான விடுதி மீது இழப்பீடு கோரி வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார் அவர்.