இரண்டாவது திருமணம்! முதல் மனைவியை துடி துடிக்க கொலை செய்த கணவன்: பயங்கர் சம்பவத்தின் பின்னணி
தமிழகத்தில் இளம் பெண்ணை முதல் கணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (28). இவரது மனைவி சங்கீதா(26). சங்கீதாவிற்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(30) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.
திருமணம் முடிந்து இருவரும் 6 மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சங்கீதாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
அதன் படி, பொன்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கீதா, அவருடன் கல்லூத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கணவர் பொன்ராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்றதால், வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது,காலை 10 மணியளவில் சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர, வீட்டின் முன்பக்க அறையில் சங்கீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் இன்று காலை கல்லூத்துவிற்கு வந்து, திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி அக்கம் பக்கத்தில் சங்கீதாவின் முகவரியை கேட்டுள்ளார்.
இதையடுத்து, சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சர்மாரியாக வெட்டி துடி துடிக்க கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
பொலிசார் தலைமறைவாக இருக்கும், கண்ணனை தேடி வருகின்றனர்.