பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கேரள செவிலியர்
இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர், முதன்முறையாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவிலிருந்து முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
கேரளாவிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர், இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினரும் உறவினரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
2001ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த சோஜன் ஜோசப் (Sojan Joseph, 49), அரசு மருத்துவ அமைப்பில் மன நல பிரிவில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார்.
பின்னர் அரசியலில் நுழைந்த சோஜன், கடந்த 2 ஆண்டுகளாக Ashford தொகுதியில் கவுன்சிலராக பணியாற்றிவந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான டேமியன் கிரீனை 1773 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 15,262 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் சோஜன்.
அவரது வெற்றியால் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |