பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் நபர் மரணம்
பிரித்தானியாவில், சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கவலையை ஏற்படுத்தும் தகவல் என்னவென்றால், அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்!
பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்டவர்கள் பாதிப்பு
பிரித்தானியாவில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி, சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves) மூலமாக பரவிய ஈ கோலை என்னும் கிருமியே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency - FSA) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்த முதல் நபர்
இந்நிலையில், லெட்டூஸ் இலைகள் மூலமாக பரவிய ஈ.கோலை கிருமித் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இங்கிலாந்தில், ஈ.கோலை கிருமித் தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் இரண்டு பேர் உயிரிழந்ததாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, அவர்களில் ஒருவர் சமீபத்தில் சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் மூலம் பரவிய ஈ.கோலை கிருமித்தொற்றால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |