பிரித்தானியாவில் கோரம்! கால்பந்து விளையாடும் போது பயங்கர மின்னல் தாக்கி பலியான சிறுவன் இவர் தான்... வெளியானது புகைப்படம்!
பிரித்தானியாவில் கால்பந்து விளையாடும் போது பயங்கர மின்னல் தாக்கி பலியான 9 வயது சிறுவனின் புகைப்படம் வெளியானது.
லங்காஷயர், பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்திலே இத்துயர சம்பவம் நடந்தது.
பலியான Jordan Banks லிவர்பூல் எப்சி கால்பந்து அணியின் தீவிர ரசிகராம். அதுமட்டுமின்றி Clifton Rangers ஜூனியர் கால்பந்து கிளப்பில் 9 வயதுக்குட்பட்ட அணிக்காக Jordan Banks விளையாடுகிறார்.
இந்நிலையில், நேற்று பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்தில் Jordan விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென பயங்கர மின்னல் தாக்கியுள்ளது.
இதனையடுத்து, படுகாயத்துடன் Jordan மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், ஆனால் மருத்துவர்களால் சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
Jordan-னின் மறைவுக்கு Clifton Rangers ஜூனியர் கால்பந்து கிளப் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Jordan மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதிகாரிகள் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.