லண்டனில் பீட்சா கடைக்கு வெளியே குத்தி கொல்லப்பட்ட சிறுவன் யார்? முதன் முறையாக வெளியான புகைப்படம்
பிரித்தானியாவின் தலைநகரில் கத்தியால் குத்தப்பட்டு 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த சிறுவனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த சிறுவன் யார் என்ற தகவலும், புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சம்பவ தினத்தன்று சிறுவன் பள்ளி சிரூடையில் இருந்துள்ளான். அப்போதே இந்த கத்தி குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருக்கும் நபர் கூறுகையில், குறித்த சிறுவன் பள்ளி சீருடை அணிந்திருந்தான். இந்த சம்பவம் எனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் நான் அந்த சிறுவன் மருத்துவமனையில் உயிர் பிழைத்துவிடுவேன் என்று நம்பினேன், இதன் காரணமாகவே நான் உடனடியாக அவசர எண்ணான 999-ஐ அழைத்தேன் என்று கூறி முடித்தார்.
இந்த ஆண்டு தலைநகரில் குத்தி கொல்லப்பட்ட 11-வது மற்றும் இளைய சிறுவன் இவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
உயிரிழந்த சிறுவனின் பெயர் Fares என்பதும், இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் காரணமாக இப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக யாரேனும் கண்டிருந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.