உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! மைதானத்தில் மழை பெய்து வரும் நிலையில் வெளியான முக்கிய அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று நடக்கவிருந்த நிலையில் மழை காரணமாக முதல் நாளின் முதல் செஷனில் ஆட்டம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இன்று நடக்கவுள்ளது.
இப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத இருக்கின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ள சவுதாம்ட்ன் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்றை போட்டியின் முதல் நாளின் முதல் session ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சவுத்தாம்டனில் அடுத்த 5 நாள்களுக்கு மழை இருக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இந்த தகவலானது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
Update: Unfortunately there will be no play in the first session on Day 1 of the ICC World Test Championship final. #WTC21
— BCCI (@BCCI) June 18, 2021