முதல் வெற்றி... ஜேர்மனியின் தடுப்பூசி திட்டத்தின் தாக்கம்
ஜேர்மன் மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதத்தினர் தங்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாயிற்று.
ஜேர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகியுள்ள நிலையில், தடுப்பூசியின் தாக்கம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட காரணமாக அமைந்துள்ளதா என்ற விடயம் விவாதிக்கப்பட்டு வருகிகிறது.
நாட்டில் 20 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிறகு, நாட்டில் பெருமளவில் கொரோனா பரவல் எங்கும் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார் ஜேர்மன் நோய் எதிர்ப்பியல் துறை தலைவரான Carsten Watzl.
அதே நேரத்தில், தடுப்பூசி நல்ல பாதுகாப்பை அளிக்கிறது என்றாலும், அதற்குப் பிறகும் தொற்று பரவ வாய்ப்புள்ளதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என எச்சரிக்கிறார் அவர்.
தடுப்பூசி திட்டத்தைப் பொருத்தவரை, இது முதல் வெற்றி என்கிறார் அவர். கோடைக்குள், விருப்பம் தெரிவிக்கும் வயது வந்தவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட இருப்பதாக வாக்களித்துள்ளது ஜேர்மன் அரசு.
ஆனால், சிலருக்கு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதால், அரசு விரும்பியபடி கோடைக்குள் இது சாத்தியமா என்பது சாத்தியமா என்பது தெரியவில்லை என்கிறார் Carsten Watzl.